search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி பெரியார் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
    X

    முன்னாள் ஆங்கிலத்துறை மாணவ, மாணவியர்கள் புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி.

    தருமபுரி பெரியார் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

    • பங்கு பெற்ற மாணாக்கர்கள் தங்களுடைய கடந்த கால நிகழ்வுகளையும் கல்லூரி அனுபவங்களையும் நினைவு கூறி மகிழ்ந்தனர்.
    • முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறை சார்பாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இத்துறையில் 2015 முதல் 2022-ஆம் ஆண்டு வரை பயின்ற மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கு பெற்ற மாணாக்கர்கள் தங்களுடைய கடந்த கால நிகழ்வுகளையும் கல்லூரி அனுபவங்களையும் நினைவு கூறி மகிழ்ந்தனர்.

    முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார். துறைத் தலைவர் பேராசிரியர் கோவிந்தராஜ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் கிருத்திகா வரவேற்புரை நிகழ்த்தினார். இறுதியாக முனைவர் சரண்யா நன்றி உரையாற்றினார். தற்போது ஆங்கிலத் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

    Next Story
    ×