search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் ெரயில் நிலையத்தில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்
    X

    கடலூர் ெரயில் நிலையத்தில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்

    • கடலூர் ெரயில் நிலையத்தில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தப்பட்டது.
    • திருப்பாதி–ரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    கொேரானா ஊரடங்கு பிறகு ெரயில்கள் இயக்கப் பட்ட பின் கடலூர் திருப்பா–திரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் நின்று சென்ற மன்னார்குடி (16179, 16180), காரைக்கால் விரைவு ெரயில்கள் (16175, 16176) தற்போது நிற்பதில்லை. இதனால் இரவு நேரத்தில் சென்னை செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே மீண்டும் திருப்பாதி–ரிப்புலியூர் ெரயில் நிலை–யத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16851, 16852), உழவன் எக்ஸ்பிரஸ் (16865, 16866), திருப்பதி (16780) வண்டிகளும் கடலூர் முதுநகர் ெரயில் நிலை–யத்தில் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும்.

    கன்னியாகுமரி புதுச்சேரி (16862), மஹால் எக்ஸ்பிரஸ் (22623), (22624) ெரயில்கள் கடலூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். 06122 சேலம் விருதாச்சலம் விரைவு ெரயில் கடலூர் முதுநகர் வரை நீட்டிக்க வேண்டும்.

    மயிலாடுதுறை இருந்து மைசூருக்கு இயக்கப்படும் ஜன்சாதப்தி விரைவு ெரயில் (16231), (16232) கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கவும், விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் முதுநகர் வரை நீட்டிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட குழு வலியுறுத்தி உள்ளது.

    Next Story
    ×