என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்த ஏ.ஐ.டி.யு.சி. கோரிக்கை
- கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஏ.ஐ.டி.யு.சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஓசூர்,
ஓசூரில், ஏ.ஐ.டி.யு.சி கிருஷ்ணகிரி மாவட்டக்குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் எம்.ஜி.ரோடில் உள்ள காந்தி சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவரும், தளி எம்.எல்.ஏ.வுமான டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
மாநில விவசாய சங்க துணைத்தலைவர் எம்.லகுமய்யா, ஏ.ஐ.டி.யு.சி.மாவட்ட செயலாளர் மாதையன் உள்பட பலர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நிதிப்பலன்களை உயர்த்த வேண்டும், 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளியை நிரந்தரம் செய்ய வேண்டும், ரூ.6,000-க்கும் குறையாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்