search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்த ஏ.ஐ.டி.யு.சி. கோரிக்கை
    X

    நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்த ஏ.ஐ.டி.யு.சி. கோரிக்கை

    • கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஏ.ஐ.டி.யு.சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    ஓசூரில், ஏ.ஐ.டி.யு.சி கிருஷ்ணகிரி மாவட்டக்குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் எம்.ஜி.ரோடில் உள்ள காந்தி சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவரும், தளி எம்.எல்.ஏ.வுமான டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    மாநில விவசாய சங்க துணைத்தலைவர் எம்.லகுமய்யா, ஏ.ஐ.டி.யு.சி.மாவட்ட செயலாளர் மாதையன் உள்பட பலர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நிதிப்பலன்களை உயர்த்த வேண்டும், 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளியை நிரந்தரம் செய்ய வேண்டும், ரூ.6,000-க்கும் குறையாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    Next Story
    ×