என் மலர்
உள்ளூர் செய்திகள்

எம்.ஜி.ஆர்., சிலைக்கு அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.
அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா
- எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
- கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அ.தி.மு.க., கட்சியின் பொன்விழா நிறைவு மற்றும் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம் சார்பில், பெத்ததாளாப் பள்ளியில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. பூஜை செய்து, எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதில், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வேலன், சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலாளர் ஏஜாஸ் அகமது, துணைச் செயலாளர் கோவிந்தசாமி, ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி கோவிந்தன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் தாபா வெங்கட்ராமன், கவுன்சி லர்கள் ஜெயராம், காசி, மாரியப்பன், ராஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






