search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலத்தூரில் வேளாண்மை துறை சிறப்பு முகாம்
    X

    சிறப்பு முகாமில் வேளாண் குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்ட காட்சி.

    இலத்தூரில் வேளாண்மை துறை சிறப்பு முகாம்

    • மாடு ஆடுகளுக்கு கிருமி நீக்க மருந்து கொடுக்கப்பட்டது.
    • 50 விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

    செங்கோட்டை:

    வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் நல்ல முத்துராஜா தலைமை தாங்கினார். வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவர் சிவகுமார் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை செயல்படுத்தினார்.

    60-க்கும் மேற்பட்ட மாடு ஆடுகளுக்கு கிருமி நீக்க மருந்து கொடுக்கப்பட்டது. மேலும் பால் மாடுகளுக்கு சத்து மருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 50 விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

    உதவி வேளாண்மை அலுவலர் அருணாச்சலம் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சம்சுதீன் மற்றும் சிவகுமார் உதவி தோட்டக்கலை அலுவலர் மணிகண்டன் செய்திருந்தனர்.

    Next Story
    ×