என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும்  கல்குவாரியால் விவசாயம் பாதிக்கும் அபாயம்
    X

    கல்குவாரியில் வைக்கப்படும் வெடியால், விவசாய நிலங்களில் கற்கள் சிதறி விழுவதை படத்தில் கணலாம்.   

    பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கல்குவாரியால் விவசாயம் பாதிக்கும் அபாயம்

    • நல்லம்பள்ளி அருகே பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கல்குவாரியால் விவசாய நிலங்கள் பாதிப்பு அடைவதாக புகார் எழுந்துள்ளது.
    • குவாரியில் வெடி வைப்பதால் குடியிருப்புகள் குலுங்கின்றன

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே, எர்ரபையனஅள்ளி ஊராட்சி சந்தாரப்பட்டி கிராமத்தில் தனியார் கல்குவாரி ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியை சுற்றிலும் பல ஏக்கர் விவசாய விளைநிலங்கள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

    கல்குவாரியில் அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக, தரை மட்டத்தில் இருந்து, சுமார் பல நூறு அடி, கீழ் மட்டம் வரை கனிம வளங்கள் தொடர்ந்து, இரவு-பகலாக வெடி வைத்து வெட்டி எடுப்பதால், குவாரியை சுற்றிலும் உள்ள, விவசாய விளை நிலங்கள் முழுவதும் கற்கள் சிதறி விழுந்து நிலங்கள் சேதம் அடைகிறது. இதனால் விவசாய பணிகள் செய்ய முடியாமல், விவசாய தொழிலுக்கு செல்லும் பணியாளர்களின் கால்களில், கற்கள் குத்தி காயம் ஏற்படுகிறது.

    மேலும் கல்குவாரி நிர்வா கத்தினர் நீர்வழிப்பா தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், மழை நீர் தனியார் குவாரிப் பகுதியில் நிரம்பு வதால், விவசாய கிணறுகளில் நீர்மட்டமும், நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்ட செல்வதால் விவசாய தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கல்குவா ரியில் தொடர்ந்து வெடி வைப்பதால், குடியி ருப்பு வீடுகள் விரிசல் ஏற்படுவதால், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்ச நிலையில் கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இது குறித்து சந்தாரப்பட்டியை சேர்ந்த விவசாயி நடேசன் கூறியதாவது;-

    கல்குவாரியில் அரசு நிர்ணயித்த அளவைவிட அதிக அளவில் பூமிக்கு அடியில், கற்களை வெடி வைத்து பல ஆண்டுகளாக எடுக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டமானது அதள பாதளத்துக்கு சென்று விட்டது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அதுமட்டுமில்லாமல் கல்குவாரியில் வைக்கப்படும் வெடியால், அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் கற்கள் சிதறி விழுகின்றன. இதனால் ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் மனிதர்களுக்கும் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வெடி வைப்பதால் தொடர் அதிர்வினால் வீடுகளில், விரிசல்கள் ஏற்பட்டு, கற்கள் வீடுகள் மேல் விழுவதால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அதுமட்டுமல்லாமல் கல்குவாரி நிறுவனமானது இப்பகுதியில் உள்ள நீரோடைகளையும், ஆக்கிரமித்து கற்களை வெட்டி எடுத்து சாலைகள் அமைத்து போக்கு வரத்திற்காக அமைத்து ள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை, சம்மந்த பட்ட கல்குவாரியால், விவசாய தொழில் செய்ய முடியாமலும், வீடுகளில் வசிக்க முடியாமல் மக்கள் கிராமத்தை விட்டு வெளியோறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×