search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடையூரில், விவசாய தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்
    X

    விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் மாரிமுத்து எம்.எல்.ஏ பேசினார்.

    எடையூரில், விவசாய தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

    • பேரவை கூட்டம் ஒன்றிய தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
    • நீர் நிலைகளில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்றிடமும், வீடும் வழங்க வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய 26-வது பேரவை கூட்டம் ஒன்றிய தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

    பேரவை கொடியை மாவட்ட குழு உறுப்பினர் குஞ்சம்மாள் ஏற்றினார். விவசாய தொழிலாளர்களின் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான சீனிவாசராவ் படத்திற்கு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் முருகையன் மாலை அணிவித்தார்.

    இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ., விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்த லைவர் தெட்சிணா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.கூட்டத்தில் ஒன்றிய தலைவராக ராஜா, செயலாளராக சிவசந்திரன், பொருளாளராக வேலுக்கன்னு, துணை தலைவர்களாக குஞ்சம்மாள், பாலசுப்ரமணியன், ரவி, துணை செயலாளர்களாக தனிக்கொடி சரவணன், இந்திராணி ஆகியோரும் 35 பேர் கொண்ட ஒன்றிய குழுவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் நீர் நிலைகளில் குடியிருக்கும் மக்களை நீதிமன்றம் உத்தரவை காட்டி அப்புறப்படுத்தும் அரசின் எண்ணத்தை கைவிட வேண்டும். நீர் நிலைகளில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்றிடமும், வீடும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×