என் மலர்
உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு
- உளுந்தூர்பேட்டையில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினரால் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்ந்தெ டுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று முதன்முறையாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வந்தார்.அவருக்கு கள்ளக்கு றிச்சி அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும் உளுந்தூர்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இரா.குமரகுரு தலைமையில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலும் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் அருகிலும் சிறப்பான முறையில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில், திருநாவலூர் ஒன்றிய செயலாளர்கள் செண்பகவேல் ,சந்திரன் மாவட்ட துணைச் செயலாளர் பரமாத்மா, ,உளுந்தூர்பேட்டை ஒன்றியச் செயலாளர்கள் மணிராஜ் ,பழனிவேல், நகர செயலாளர் துரை, திருவெண்ணெய் நல்லூர் ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், நகரச் செயலாளர் காண்டீபன், விநாயகா கல்வி குழுமத்தின் தலைவர் நமச்சிவாயம் ,மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் காந்தலவாடி பாக்கியராஜ், அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.