என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.திமு.க பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- தெற்கு மாநகர பகுதி செயலாளர் பி.ஆர். வாசுதேவன் தலைமை வகித்தார்.
- பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர தெற்கு அ.தி.மு.க. பகுதி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், மத்திகிரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
தெற்கு மாநகர பகுதி செயலாளர் பி.ஆர். வாசுதேவன் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில், கிருஷ்ண–கிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்றுவார்டு வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, குறித்து ஆலோசனைகளை வழங்கியதுடன், அ.தி.மு.க தொண்டர்களின் கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினர்கள் கேட்டறிந்து அவர்களுக்கான தேவை யான உதவிகளை செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்கள் குபேரன் என்ற சங்கர், லட்சுமி ஹேமகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






