search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
    X

    நீலகிரியில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்

    • எம்.ஜி.ஆர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
    • கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கட்சியினர் கொண்டாட்டம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் அதிமுக 52-வது ஆண்டு துவக்க விழா நடந்தது. அப்போது கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, கூடலூர் எம்.எல்.ஏ பொன்ஜெயசீலன்,மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார், பாசறை மாவட்ட செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு, குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, கோத்தகிரி.ஒன்றிய செயலாளர் தப்பகம்பை கிருஷ்ணன், குன்னூர் ஒன்றிய செயலளர்கள் ஹேம்சந்த், பேரட்டி ராஜி,மீனவர் அணி.மாவட்ட செயலாளர் விசாந்த், பேரவை மாவட்ட துணை செயலாளர் வடிவேல், மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளரும், எப்பநாடு ஊராட்சி தலைவருமான சிவக்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத்திற்கு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    Next Story
    ×