search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடத்தூரில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழா
    X

    கடத்தூரில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழா

    • எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    • ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் கடத்தூரில் அ.தி.மு.க.வின் 51 -ம் ஆண்டு தொடக்க விழாவையடுத்து முன்னாள் முதல்-அ மைச்சர்கள் எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு கடத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார்.

    நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் துரை, நகர அவை தலைவர் கந்தசாமி, ஒன்றிய துணை செயலாளர் ரவீந்திரன், நகர செயலாளர் சந்தோஸ், கவுன்சிலர் சாயுல்லா,முன்னாள் நகர செயலாளர் சசிகுமார், மாது,சிவா, கோபிநாத், மாணிக்கம், உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். நிகழ்சியில் பொதுமக்கள், கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×