search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளத்தில்  அ.தி.மு.க. பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான நோட்டுகளை முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா வழங்கிய காட்சி.

    ஆலங்குளத்தில் அ.தி.மு.க. பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • பூத்கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்றது.
    • கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பேரூராட்சி யில் 15 வார்டுகள் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல்

    வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பில் இளைஞர்கள் இளம்பெண்கள், மகளிர் பாசறை, அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கட்சி நிர்வாகிகளை கொண்டு வார்டுகளில் பூத்கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

    இந்த பூத்கமிட்டி உறுப்பி னர்கள் மற்றும் நிர்வாகி களுக்கான ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்றது. பூத்கமிட்டி ஆலோசனை கூட்டத்திற்கு ஆலங்குளம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் கே.பி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் எஸ்.கே. சண்முக சுந்தரம், தென்காசி தெற்கு மாவட்ட துணை செயலாளர் பசுவதி, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் இருளப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பூத் கமிட்டி பணிகள்

    தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற செய்ய வேண்டிய பணிகள், தேர்தல் களப்பணிகள், வாக்காளர்களை சந்தித்தல் உள்ளிட்ட பூத்கமிட்டியின் பணிகள் குறித்து விளக்கி பேசினார்.

    ஆலங்குளம் பேரூராட்சி 13- வது வார்டு, 14-வது வார்டு, 15-வது வார்டு மற்றும் சந்தனமாரியம்மன் கோவில் திடல், நத்தம் மாரியம்மன் கோவில் திடல், நாடார் திருமண மண்டபம், அண்ணாநகர், பரும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்ற பூத்கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலங்குளம் நகர துணைசெயலாளர் சால மோன்ராஜா, பேரூராட்சி துணை தலைவர் ஜான்ரவி, கவுன்சிலர் அன்னத்தாய் சொரிமுத்து, தகவல் தொழில்நுட்பம் நிக்சன் சத்தியராஜ், சிறுபான்மை பிரிவு ஐசக்சேகர், முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் தமிழரசன், ஜெயலலிதா பேரவை தனபால், விவசாய அணி தங்கசாமி மாரியப்பன், நகர இணை செயலாளர் நடராஜன், சுமோ சூரியன், இளைஞரணி கேபி குமரன் தேவதாஸ் சுரேந்திரன். சொரிமுத்து சொக்கலிங்கம்.செந்தில் தீப்பொறி பெரிய பாண்டியன், 11-வது வார்டு தங்கராஜ் தேவதாஸ், நகர மகளிர் அணி முத்து லெட்சுமி, விஜி வனிதா வசந்தி உள்பட அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×