என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் நடைபெற உள்ள மாநாடு குறித்து தென்காசியில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முனுசாமி பேசியபோது எடுத்த படம்.

    மதுரையில் நடைபெற உள்ள மாநாடு குறித்து தென்காசியில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

    • கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • மாநாட்டில் 5 சட்டமன்ற தொகுதிகள் சார்பில் 50 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    தென்காசி:

    மதுரையில் வருகிற (ஆகஸ்ட்) 20-ந் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

    தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தென்காசி இசக்கி மஹால் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான செல்வமோகன்தாஸ் பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மாநில அமைப்பு செயலாளர் ஆலங்குளம் பி.ஜி. ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், முன்னாள் எம்.பி. கே.ஆர்.பி.பிரபாகரன், மாவட்ட அவைத்தலைவர் இலஞ்சி எஸ்.கே. சண்முகசுந்தரம், சாம்பவர்வ டகரை வி.பி.மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் பொய்கை மாரியப்பன், வீரபாண்டியன், பசுபதி, மாவட்ட இணை செயலாளர்கள் முத்து லட்சுமி, சண்முகப்பிரியா, மாவட்ட பொருளாளர்கள் சாமிநாதன், சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வருகிற 20-ந் தேதி மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகள் சார்பில் 50 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும், மதுரை எழுச்சி மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மகத்தான வெற்றி பெற அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பேசினார்கள்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டை யன், தங்கமணி, வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன் செல்லப்பா, அமைப்பு செயலாளர் கருப்ப சாமி பாண்டியன் இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவன் ஆகியோர் பேசினார்கள்.

    இதில் மானூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி செந்தில்குமார் மற்றும் தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் தென்காசி சுடலை,சுரண்டை சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். தென்காசி நகர செயலாளர் சுடலைநன்றி கூறினார்.

    Next Story
    ×