search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதியமான் பப்ளிக் பள்ளி மாணவ-மாணவியரின் சாதனை
    X

    அதியமான் பப்ளிக் பள்ளி மாணவ-மாணவியரின் சாதனை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆலத்தூரில் மாநில அளவில் நடைபெற்ற அணியில் கலந்து கொண்டனர்.
    • மாணவர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    மத்தூர்,

    ஊத்தங்கரை, அதியமான் பப்ளிக் பள்ளியில் உள்ள சாரண, சாரணியர் இயக்க மாணவர்கள் கடந்த வாரம் 27-ம் தேதி முதல் 29 -ம் தேதி வரை சென்னை ஆலத்தூரில் மாநில அளவில் நடைபெற்ற அணியில் கலந்து கொண்டனர்.

    அவ்வணியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் உடல், உள, ஆன்மீக மேம்பாட்டிற்காகவும் கட்டமைக்கப்பட்ட வாழ்வை வாழ்வதற்கும் சமூக செயல்பாடுகளில் உச்ச திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அங்கு பல செயல்திறன் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடைபெற்றன. அப்பயிற்சிகளுக்கு கல்வி அமைச்சரும், சாரண சாரணியர் இயக்க தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமை வகித்தார். அப்பயிற்சியின் முடிவில் சில போட்டிகள் நடைபெற்றன.

    பேண்ட் பார்டியில் சாரண மாணவர்கள் முதலிடமும் சாரணிய மாணவிகள் இரண்டாம் இடமும் பெற்று வெற்றி வாகை சூடினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    மிகச் சிறப்பாக செயல்பட்ட சாரண, சாரணிய இயக்க மாணவர்களுக்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் சீனி. திருமால் முருகன், செயலர் சோபா திருமால் முருகன், நிர்வாக இயக்குநர் சீனி. கணபதி இராமன், அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்து மாணவர்களை ஊக்குவித்தனர்.

    Next Story
    ×