என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

அதியமான் பப்ளிக் பள்ளி மாணவ-மாணவியரின் சாதனை

- ஆலத்தூரில் மாநில அளவில் நடைபெற்ற அணியில் கலந்து கொண்டனர்.
- மாணவர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மத்தூர்,
ஊத்தங்கரை, அதியமான் பப்ளிக் பள்ளியில் உள்ள சாரண, சாரணியர் இயக்க மாணவர்கள் கடந்த வாரம் 27-ம் தேதி முதல் 29 -ம் தேதி வரை சென்னை ஆலத்தூரில் மாநில அளவில் நடைபெற்ற அணியில் கலந்து கொண்டனர்.
அவ்வணியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் உடல், உள, ஆன்மீக மேம்பாட்டிற்காகவும் கட்டமைக்கப்பட்ட வாழ்வை வாழ்வதற்கும் சமூக செயல்பாடுகளில் உச்ச திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அங்கு பல செயல்திறன் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடைபெற்றன. அப்பயிற்சிகளுக்கு கல்வி அமைச்சரும், சாரண சாரணியர் இயக்க தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமை வகித்தார். அப்பயிற்சியின் முடிவில் சில போட்டிகள் நடைபெற்றன.
பேண்ட் பார்டியில் சாரண மாணவர்கள் முதலிடமும் சாரணிய மாணவிகள் இரண்டாம் இடமும் பெற்று வெற்றி வாகை சூடினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மிகச் சிறப்பாக செயல்பட்ட சாரண, சாரணிய இயக்க மாணவர்களுக்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் சீனி. திருமால் முருகன், செயலர் சோபா திருமால் முருகன், நிர்வாக இயக்குநர் சீனி. கணபதி இராமன், அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்து மாணவர்களை ஊக்குவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
