search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை ஜூலை 17-ல் தொடக்கம்
    X

    கோப்பு படம்.

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை ஜூலை 17-ல் தொடக்கம்

    • ஆகஸ்டு 10-ந் தேதி ஆடி லட்சார்ச்சனை புரஸ்சரண ஹோமம் நடைபெறும்.
    • ஆகஸ்டு 11-ந் தேதி பெரியநாயகி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும் இரவு 8.30 மணிக்கு ரத வீதிகளில் வெள்ளித் தேர் உலாவும் நடைபெறும்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் நிர்வாகத்தின் கீழ் கிழக்கு ரத வீதியில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் லட்சார்ச்சனை பூஜை நடைபெறும். இந்த வருடம் வருகிற ஜூலை 17-ந் தேதி முதல் லட்சார்ச்சனை தொடங்க உள்ளது. ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி வரை சாயரட்சை பூஜை முடிந்தவுடன் லட்சார்ச்சனை பூஜை நிறைவு பெறும்.

    நாள் ஒன்றுக்கு 4000 அர்ச்சனைகள் வீதம் 1 லட்சம் அர்ச்சனைகள் செய்யப்படும். ஆகஸ்டு 10-ந் தேதி ஆடி லட்சார்ச்சனை புரஸ்சரண ஹோமம் நடைபெறும். ஆகஸ்டு 11-ந் தேதி பெரியநாயகி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும் இரவு 8.30 மணிக்கு ரத வீதிகளில் வெள்ளித் தேர் உலாவும் நடைபெறும்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×