என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூரில் அதியமான் நாவல் வெளியீட்டு விழா
    X

    விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    அரூரில் அதியமான் நாவல் வெளியீட்டு விழா

    • விழாவில், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலர் சின்னக்கண்ணன் தலைமை வகித்தார்.
    • கவிஞர் ரவீந்திர பாரதி ஏற்புரை வழங்கினார்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் அதியமான் நாவல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலர் சின்னக்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சிங்காரவேலன் முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் நடராஜன் வரவேற்றார்.

    விழாவில், திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சுப்பராயன் நாவலை வெளியிட தகடூர் புத்தகப் பேரவையின் செயலர் மருத்துவர் செந்தில், தொழிலதிபர் முத்து ராமசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். கவிஞர் ரவீந்திர பாரதி ஏற்புரை வழங்கினார்.

    இந்த விழாவில், இந்திய கம்யூ.கட்சியின் மாவட்ட செயலர் கலைச்செல்வம், தகடூர் புத்தக பேரவைத் தலை வர் சிசுபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, நடைபெற்ற கருத்தரங்கில் மாநிலத் தலைவர் எஸ்.கே.கங்கா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் மருத்துவர் அறம் கருத்துரைகளை வழங்கினார். இந்த விழாவில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×