search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூரில் நடிகர் விஜய் பிறந்த நாள் விழா
    X

    மத்தூர் சிவம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கிய போது எடுத்த படம்.

    மத்தூரில் நடிகர் விஜய் பிறந்த நாள் விழா

    • மத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளி மற்றும் புறநோயாளிகள் பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
    • சிவம்பட்டி பகுதியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்க இளைஞரணி சார்பில் அகில இந்திய பொது செயலாளரும், முன்னால் எம்.எல்.ஏ. என்.புஸ்ஸி ஆனந்தின் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி தலைவர் இளையப்பன் மற்றும் சத்தியசீலன், சங்கர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி இளைஞரணி தலைமையில் நடிகர் விஜய்யின் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு சிவம்பட்டி பகுதியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    முன்னதாக இவ்விழாவில் சிவம்பட்டி ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் பாலாபிஷேக சிறப்பு பூஜையும் நடைபெற்றன.

    அதனை தொடர்ந்து சிவம்பட்டி அரசு தொடக்கக் கல்வி மாணவ, மாணவியர் 200 பேருக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள் உப கரணங்கள் வழங்கப்பட்டது.

    அத்துடன் மத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளி மற்றும் புறநோயாளிகள் பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் சிவம்பட்டி, மத்தூர், களர்பதி, கிருஷ்ணாவரம் உள்ளிட்ட பகுதிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சத்தியநாராயணன், சக்தி, சத்தியன், அருள்குமார, அருண்குமார், தளபதி பாஸ்கரன், விஜயரங்கன், சாம்ராஜ், லோகேஷ், வினோத், இளவரசன், சாரதி, பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×