search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உரிமம் பெறாமல் வீடுகளில் கழிவு நீரை அகற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை
    X

    உரிமம் பெறாமல் வீடுகளில் கழிவு நீரை அகற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை

    • அனுமதி பெறாமல் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும்.
    • பொன்னேரி நகராட்சி ஆணையாளர் கோபிநாத் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    பொன்னேரி நகராட்சி உள்ள 27 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர், தொழிற்சாலைகளின் கழிவு நீர் டிராக்டர், லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பெரும்பாலான வாகனங்கள் உரிய அனுமதி பெறாமல் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபடுவதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து உரிய அனுமதி பெறாமல் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என்று பொன்னேரி நகராட்சி ஆணையாளர் கோபிநாத் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    Next Story
    ×