என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை: கிருஷ்ணகிரி எஸ்.பி.எச்சரிக்கை
    X

    வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை: கிருஷ்ணகிரி எஸ்.பி.எச்சரிக்கை

    • சிகிச்சை பலனின்றி ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார்.
    • தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்ஜிஆர் நகரை சோந்த மாதையன் மகன்கள் பிரபு(29), பிரபாகரன்(30) ஆகியோர் ராணுவத்தில் பணியாற்றி வந்தனர். அவர்கள் 2 பேரும் விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி காலை, அப்பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் அருகில் பிரபாகரன் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அப்பகுதி கவுன்சிலரும், அவர்களது உறவினருமான சின்னசாமி, பொதுமக்கள் குடிநீர் பிடிக்கும் இடத்தில், துணை துவைக்க வேண்டாம் என கூறினார்.

    இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் இருதரப்பினரும், ஒருவருக்குகொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். சின்னசாமி, சென்னையில் ஆயுதபடை காவலராக பணிபுரியும் குருசூர்யா(35) உள்ளிட்ட 9 பேர் ராணுவ வீரர்களான பிரபு, பிரபாகரன், அவரது தாயார் கண்ணம்மாள், தந்தை மாதையன் ஆகிய 4 பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி சிகிச்சை பலனின்றி ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார். முதலில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில் அவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது-. அதில் தொடர்புடைய கவுன்சிலர் சின்னசாமி, போலீஸ்காரர் குருசூர்யா உள்பட 9 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஒரு கட்சியை சேர்ந்த கவுன்சிலர், ராணுவ வீரரை கொலை செய்து விட்டதாகவும், ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல சமூக வலைதளங்களில் சிலர் தகவல்களை பரப்பி வருகிறார்கள். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. தாக்கியவர்கள், காயம் அடைந்தவர்கள், ராணுவ வீரர்கள் அனைவரும் மிகவும் நெருங்கிய உறவினர்கள். சாதாரண அடிதடி சம்பவம் கொலையில் முடிந்துள்ளது.

    சில அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், இந்த சம்பவத்தை திட்டமிட்டு கொலை செய்தார்கள் என அரசியல் கண்ணோட்டத்தோடு சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அவ்வாறு தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×