search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே  இலவச புத்தகப்பைகளை வாய்க்காலில் வீசிய மாணவர்கள் மீது நடவடிக்கை : சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    X

    விழுப்புரம் அருகே கோலியனூரில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச புத்தகப்பைகளை மாணவர்கள் வாய்க்காலில் வீசி சென்றுள்ளனர்.

    விழுப்புரம் அருகே இலவச புத்தகப்பைகளை வாய்க்காலில் வீசிய மாணவர்கள் மீது நடவடிக்கை : சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    • மாணவர்களுக்கு புத்தகப்பை கள் நேற்று வழங்கப்பட்டது. இந்தப் பைகள் மிகவும் நேர்த்தியாகவும், தரமான தாகவும் இருந்தது
    • 10-்க்கும் மேற்பட்டவர்கள் புத்தகப் பைகளை கழிவுநீர் வாய்க்காலில் வீசி சென்றனர்,

    விழுப்புரம்,:

    தமிழகம் முழுவதுமுள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகப்பைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் புத்தகப்பை வழங்கப்பட்டு வருகிறது.்அதன்படி விழுப்புரம் அடுத்த கோலியனூர் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை கள் நேற்று வழங்கப்பட்டது. இந்தப் பைகள் மிகவும் நேர்த்தியாகவும், தரமான தாகவும் இருந்தது. இந்தப் பைகளை பெற்றுக் கொண்ட 12-ம் வகுப்பு மாணவர்கள் ஒரு சிலர் இதனை வாய்க்காலில் வீசி சென்றுள்ளனர்.

    புத்தகப்பைகள் வேண்டா மென்றால், பள்ளியிலேயே திருப்பி அளித்திருக்கலாம், அல்லது ஏழை மாண வர்கள் யாருக்காவது கொடுத்தி ருக்கலாம். ஆனால் அடா வடி மாணவர்கள் 10-்க்கும் மேற்பட்டவர்கள் புத்தகப் பைகளை கழிவுநீர் வாய்க்காலில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஎனவே, புத்தகப்பைகளை வாய்க்காலில் வீசி சென்ற மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வீசி சென்றவர்களுக்கு அனைத்து இலவசங்களையும் நிறுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×