என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுமுறை அளிக்காத 57 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
    X

    விடுமுறை அளிக்காத 57 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

    • 57 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 57 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) எம்.வெங்கடாசலபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் மற்றும் விதிகள் படி தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிய கூடிய தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காத பட்சத்தில் அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து தொடர்புடைய தொழிலாளர்களுக்கு அறிவிப்பு அளிக்க வேண்டும்.

    அதன் நகலை தொழிலாளர் துணை அல்லது உதவி ஆய்வாளருக்கு அனுப்பி விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் பார்வைக்கு வைக்க வேண்டும். இந்த நிலையில் குடியரசு தினத்தன்று கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், 40 கடைகள், 26 உணவு நிறுவனங்கள் என 66 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சட்ட விதிமுறைகளை பின்பற்றாத 33 கடைகள் மற்றும் நிறுவனங்கள் , 24 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 57 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×