என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மொரப்பூர் கொங்கு பள்ளியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா
- மொரப்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
- விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டி பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் அரூர் சரக அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடை பெற்றது.
விழாவிற்கு கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் மோகன்ராசு தலைமை வகித்தார். அறக்கட்டளை செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சாமிக்கண்ணு, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளி தாளாளர் சந்திரசேகர், மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் பொன் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் ஆனந்த் வரவேற்று பேசினார்.
விழாவில் அரூர் சரக அளவில் நடைபெற்ற கபாடி, கோ கோ, எரிப்பந்து, கூடைப்பந்து, கேரம், இறகுப்பந்து உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பல்வேறு போட்டிகளில் மொரப்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டி பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.
இவ்விழாவில் கொங்கு கல்வி அறக்கட்டளை இயக்குனர்கள் தமிழரசு, பரமசிவம், குணசீலன், நாகராஜ், ராமு, கணேசன், வெற்றிச்செல்வன், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மோகன்தாஸ், சி.பி.எஸ்.சி.பள்ளி முதல்வர் சர்மிளா தேவி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரி யர் விக்னேஷ் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்