search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகண்டை கூட்டு ரோட்டில் விபத்து: கார் மரத்தில் மோதி டிரைவர் பலி
    X

    விபத்துக்குள்ளான கார்.

    பகண்டை கூட்டு ரோட்டில் விபத்து: கார் மரத்தில் மோதி டிரைவர் பலி

    • பகண்டை கூட்டு ரோட்டில் நடந்த விபத்தில் கார் மரத்தில் மோதி டிரைவர் பலியானார்.
    • கார் நிலை தடுமாறி சாலை யோரம் உள்ள மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கண்டாச்சிபுரத்தை அடுத்த குடமரட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). டிரைவர். இவர் காரில் பகண்டை கூட்டு ரோட்டில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது புதூர் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி சாலை யோரம் உள்ள மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கார் டிரைவர் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×