என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே விபத்து:  அரசு பஸ் மோதி பெண் பலி
    X

    கிருஷ்ணகிரி அருகே விபத்து: அரசு பஸ் மோதி பெண் பலி

    • மோட்டார்சைக்கிளில் சென்னை பை பாஸ் சாலையில் சென்றனர்.
    • அவ்வழியாக வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியது.

    கிருஷ்ணகிரி,

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி சுமதி (வயது 38). இவர்கள் மோட்டார்சைக்கிளில் சென்னை பை பாஸ் சாலையில் சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே சுமதி உடல் நசுங்கி உயிரிழந்தார்.அவரது கணவர் வேலாயுதம் படுகாயம் அடைந்தார்.அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×