search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரத்தில் இன்றுகாலை விபத்து  துளை போடும் எந்திரம் மீது அரசு பஸ் மோதல்- டிரைவர் பலி
    X

    பலியான டிரைவர் சகாதேவன்

    சிதம்பரத்தில் இன்றுகாலை விபத்து துளை போடும் எந்திரம் மீது அரசு பஸ் மோதல்- டிரைவர் பலி

    • சென்னையில் இருந்து நாகை நோக்கி இன்று காலை அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது.
    • பைபாஸ் சாலையில் தற்போது சாலை பணிகள் நடந்து வருகிறது. இதற்கான துளை போடும் எந்திரம் நிறுத்தப்பட்டு இருந்தது.

    கடலூர்:

    சென்னையில் இருந்து நாகை நோக்கி இன்று காலை அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை குடவாசல் பகுதியை சேர்ந்த டிைரவர் சகாதேவன் ஓட்டினார். இந்த பஸ் சிதம்பரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. பைபாஸ் சாலையில் தற்போது சாலை பணிகள் நடந்து வருகிறது. இதற்கான துளை போடும் எந்திரம் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இந்த எந்திரத்தின் மீது அரசு பஸ் பயங்கரமாக ேமாதியது. இதில் பஸ்சின் முன்பகுதி சிதைந்தது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் சகாதேவன் சம்பவ இடத்தில் பலியானார். பயணிகள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த இடம் முக்கிய சாலை ஆகும். இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கியவர்கள் வேதனையால் துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்தனர். அவர்கள் தூக்கி கொண்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து சிதம்பரம் டவுன் போலீசார் விசாரிக்கிறார்கள்.

    Next Story
    ×