என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு இடங்களில் விபத்து: மரம் ஏறும் தொழிலாளி-விவசாயி சாவு
- பைக் மீது மினி லாரி ஒன்று மோதியது.
- மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். மரம் ஏறும் தொழிலாளியான இவர் தனது மோட்டார்சைக்கிளில் காரிமங்கலம் அடுத்துள்ள அனுமந்தபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதனால் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதேபோல அரூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 46). இவர் மெக்கானிக் பட்டறை நடத்தி வந்தார்.
இவர் தருமபுரிக்கு வந்து பொருட்கள் வாங்கிக்கொண்டு மீண்டும் ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அரூர் அருகே ஜடையம்பட்டி என்ற இடத்தின் அருகே அவர் மீது மினி லாரி ஒன்று மோதியது. இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.