search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ பற்றி கருகியவர்:  தருமபுரி பெண் சிகிச்சை பலனின்றி சாவு
    X

    தீ பற்றி கருகியவர்: தருமபுரி பெண் சிகிச்சை பலனின்றி சாவு

    • அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி ராமசாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி.

    இவரது மனைவி உமாமகேஸ்வரி (வயது 48). கடந்த கார்த்திகை திருநாள் அன்று விரதம் இருந்து வழிபாடு நடத்திய உமாமகேஸ்வரி ஆடையில் எதிர்பாராத விதமாக விளக்கிலிருந்து தீ பற்றி பரவியது.

    இதில் உடல் கருகிய நிலையில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட உமாமகேஸ்வரியை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    Next Story
    ×