என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
    X

    தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

    • காந்தி நினைவு நாளை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காந்தி நினைவு நாளை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் திரும்ப படித்து எடுத்துக் கொண்டனர்.

    முன்னதாக இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×