என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னூர் பஸ் நிலையத்தில் அப்துல்கலாம் பிறந்தநாள் கொண்டாட்டம்
- ஆதரவற்றோர் இல்லம் சார்பில் கொண்டாடப்பட்டது
- பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
அருவங்காடு,
குன்னூர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லம் சார்பில் பஸ் நிலையம் முன்பு கலாம் 92-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் நீலகிரி சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு, குன்னூர் வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் ரஹீம், மக்கள் நற்பணி மைய தலைவர் கன்டோன்மென்ட் வினோத்குமார், நீலகிரி சோசியல் மீடியா நிறுவனர் சிக்கு, ஹியூமன் ரைட்ஸ் பாபு, ஐஸ்வர்யா கன்ஸ்ட்ரக்சன், மேத்யூ டாக்ஸி நிறுத்தம் நண்பர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
Next Story






