என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
தூய்மைப் பணிகளை செய்ய தனியாருக்கு ஒப்பந்தம் செய்வதை கைவிட வேண்டும்
- உள்ளாட்சி பணியாளர்களுக்கு தனியாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஊதியம் வழங்க வேண்டும்.
- பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், அரசு அறிவித்த ஊதிய உயர்வு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட உள்ளாட்சி பணியாளர் சங்கத்தின் கோரிக்கை விளக்க மாவட்ட பேரவை கூட்ட மாவட்ட த்தலைவர் மனோகரன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் உள்ளாட்சி பணியாளர்களுக்கு தனியாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஊதியம் வழங்க வேண்டும்.
பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், அரசு அறிவித்த ஊதிய உயர்வு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்தி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைப் பணிகளை செய்ய தனியாருக்கு ஒப்பந்தம் செய்வதை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார செய்வது, ஆகஸ்ட்-9 ம் தேதி சென்னையில் நடைபெறும் வெள்ளையனே வெளியேறு ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
இதில் நிர்வாகிகள் கனகா, சுமதி, கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், துணை செயலாளர் மாதேஸ்வரன், ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் மணி, துணை செயலாளர் நடராஜன், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
கூட்டத்தில் கட்டட சங்க மாவட்ட செயலாளர் ஏ.சி.மணி, துணைத்தலைவர் முருகேசன், விசைத்தறி மாவட்ட செயலாளர் சாமிநாதன், ஆஷா பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் மேனகா, பள்ளி தூய்மை பணியாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் அனுசுயா நன்றி கூறினார்.






