search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் பகுதி கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா
    X

     தோரணமலை முருகன் கோவிலில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன பூஜை நடைபெற்ற காட்சி.

    கடையம் பகுதி கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தோரணமலை முருகன் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
    • நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் மற்றும் தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

    கடையம்:

    கடையம் பகுதி சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா இன்று காலை நடைபெற்றது.

    கடையம் நித்திய கல்யாணி அம்மன் - வில்வ வன நாதர் கோவில், சிவசைலம் சிவசைலநாதர் கோவில், ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவில், தோரணமலை முருகன் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

    தோரண மலை முருகன் கோவிலில் நடராஜருக்கு திருவாதிரை ஆருத்ரா தரிசன பூஜை நடைபெற்றது.அதிகாலையில் மலை அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் மற்றும் தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு மலையை சுற்றி சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடக்கும் கிரிவலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனை வருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    Next Story
    ×