என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
திண்டுக்கல்லில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
- சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
- போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார்(28). ஆட்டோ டிரைவர். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்ேடாரியா லூர்துமேரி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தார்.
Next Story






