search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் அழுகிய நிலையில் கேட்பாரற்று கிடந்த வாலிபர் உடல்
    X

    கோப்பு படம்.

    கொடைக்கானலில் அழுகிய நிலையில் கேட்பாரற்று கிடந்த வாலிபர் உடல்

    • கோம்பைகாடு பகுதியில் சுமார் 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • இங்கு சுற்றுலா வரும் நபரை தாக்கி கொலை செய்த சம்பவமும், காரில் அழைத்து வந்து கொலை செய்துவிட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை தள்ளி சென்ற சம்பவங்களும் நடந்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அடுத்துள்ள வில்பட்டி பழைய சாராயகடை பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்பட்டதால் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மாயமான நபர்களின் விபரங்களை சேகரித்து விசாரித்தனர். ஆனால் எந்த நபரும் மாயமாகவில்லை என தெரியவந்ததால் சுற்றுலா பயணி யாரேனும் இறந்தாரா என்று விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோம்பைகாடு பகுதியில் சுமார் 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த 2 நபர்கள் குறித்தும் எந்த விபரமும் தெரியவில்லை.

    கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக இருந்துவரும் நிலையில் பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இங்கு சுற்றுலா வரும் நபரை தாக்கி கொலை செய்த சம்பவமும், காரில் அழைத்து வந்து கொலை செய்துவிட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை தள்ளி சென்ற சம்பவங்களும் நடந்துள்ளது. பலமாதங்கள் கழித்துதான் இதுபோன்ற சம்பவங்கள் வெளியில் வரும்.

    அதுபோல் ஒரேவா ரத்தில் 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் யார்? கொலை செய்யப்பட்டார்களா? அல்லது இயற்கையாக இறந்தார்களா என்று தெரியவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர். இறந்தவர்கள் விபரத்தை போலீசார் உரிய விசாரணை நடத்தி கண்டறியவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×