என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடும்ப தகராறில் உயிரை மாய்த்த இளம் பெண்
- கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
- மனமுடைந்து காணப்பட்ட சத்யா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள கனவனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சத்யா (வயது 29). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 1 மகன் 1 மகள் உள்ளனர்.
இந்நிலையில் கணேசனுக்கும் சத்யா விற்க்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட சத்யா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






