search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி மலைக்கோவிலில் மூலவரை செல்போனில் படம் பிடித்த இளம்பெண்
    X

    கோப்பு படம்.

    பழனி மலைக்கோவிலில் மூலவரை செல்போனில் படம் பிடித்த இளம்பெண்

    • கோவில் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து சோதனை நடத்தியதில் இளம்பெண்னின் தந்தை கூறியது பொய் எனவும், அர்ச்சகர் வீடியோ எடுத்ததை மட்டுமே கண்டித்துள்ளார் எனவும் உறுதியானது.
    • இளம்பெண் மற்றும் அவரது தந்தையிடம் இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் அரிய வகை நவ பாஷாணத்தால் உருவாக்கப்பட்ட மூலரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர் தனது மகளுடன் மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவரது மகள் செல்போனை மறைவாக வைத்து மூலவரை படம் பிடித்துள்ளார். இதையறிந்த கோவில் அர்ச்சகர் அதை கண்டித்துள்ளார். அதனை கேட்காமல் அந்த பெண் தொடர்ந்து படம் எடுக்க முயன்றதால் அர்ச்சகர் செல்போனை வாங்கி அதில் அவர் வீடியோவாக எடுத்த கோவில் நிகழ்ச்சிகள் குறித்து கூறி கண்டித்துள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின் அந்த பெண்ணின் தந்தை கோவில் அர்ச்சகரிடம் நீங்கள் எப்படி செல்போனை வாங்கி பார்க்கலாம்? எனது மகளை தொட்டு பேசுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நான் உங்களை போக்சோ சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

    அதன் பிறகு கோவில் கண்காணிப்பளரிடமும் இது குறித்து அவர் புகார் அளித்தார். இதனையடுத்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அவரிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு கோவில் கண்காணிப்பு ேகமராவில் பதிவான காட்சிகளை வைத்து சோதனை நடத்தியதில் ஈரோட்டைச் சேர்ந்த இளம்பெண்னின் தந்தை கூறியது பொய் எனவும், அர்ச்சகர் வீடியோ எடுத்ததை மட்டுமே கண்டித்துள்ளார் எனவும் உறுதியானது.

    இதனைத் தொடர்ந்து அர்ச்சகரை மிரட்டிய இளம்பெண் மற்றும் அவரது தந்தையிடம் இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்து அனுப்பி வைத்தனர். இதனிடையே ஈரோட்டைச் சேர்ந்த இளம்பெண் மற்றும் அர்ச்சகரிடையே நடந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    பழனி மலைக்கோவிலில் செல்போன்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதனையும் மீறி பக்தர்கள் செல்போன்களை மலைக்கோவிலுக்கு கொண்டு வருதும், மூலவருக்கு நடைபெறும் அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை படம் பிடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதே போல் இரவில் தங்கத் தேரோட்டம் நடைபெறும் போதும் பக்தர்கள் செல்போனில் படம் பிடிப்பதில் ஆர்வம் காட்டுவதால் சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்கும் கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களுடன் வாக்குவாதமும் ஏற்பட்டு வருகிறது. எனவே மலைக்கோவிலுக்கு செல்போன்கள் கொண்டு வருவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் வழிகாட்டிகள் என கூறிக் கொண்டு அவதூறு பரப்பும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×