என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர்
    X

    இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர்

    • திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார்.
    • திருமணம் செய்து கொள்ள காளிராஜ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேட்டை அருகேயுள்ள புளியானூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் திருப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    அவருடன் வேலை பார்த்து வந்த இவரது உறவினர் நாகணம்பட்டி பகுதியை சேர்ந்த சிவராஜ் மகன் காளிராஜ் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார்.

    இருவரும் பல்வேறு இடங்களில் காதல் ஜோடியாக சுற்றி திரிந்தனர். இந்நிலையில் காளிராஜ் பலமுறை அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

    தற்போது அந்த இளம்பெண் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ள காளிராஜ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கு காளிராஜின் பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து ஊத்தங்கரை மகளிர் போலீசில் அந்த இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.

    அந்த புகாரின்பேரில் காளிராஜ், அவரது பெற்றோர் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×