என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலையில் தீப்பிடித்ததில் உடல் கருகி பெண் சாவு
- வீட்டில் மண்ண்ணெணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
- மாதம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழையபேட்டை பெங்காளி தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மாதம்மாள் (வயது 55). கடந்த 24-ந் தேதி இவர் வீட்டில் மண்எண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயம் அடைந்த மாதம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாதம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






