search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் ஆற்று வெள்ளம் ஊருக்குள் நுழைவதை தடுக்க சுவர்
    X

    குன்னூரில் ஆற்று வெள்ளம் ஊருக்குள் நுழைவதை தடுக்க சுவர்

    • அ.தி.மு.க நகர மன்ற உறுப்பினருமான சரவணகுமார் பணிகளை ஆய்வு செய்தார்.
    • எம்.ஜி.ஆர் நகர் மக்கள் தங்களின் நன்றிகளை தெரிவித்தனர்,

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 25 ஆண்டுகளாக மழை காலங்களில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ஆற்று வெள்ளம் வீடுகளில் புகுந்து மக்கள் கஷ்டப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் முன்னாள் நகர மன்ற தலைவரும் அ.தி.மு.க நகர மன்ற உறுப்பினருமான சரவணகுமார் சுமார் ரூ.50 லட்சம் செலவில் ஆற்று வெள்ளம் ஊருக்குள் செல்லாதபடி தடுக்கும் வகையில் நீண்ட தடுப்புசுவர் அமைக்கும் பணிக்கு நிதி பெற்றுக்கொடுத்து தற்போது நடைப்பெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டார்.

    தங்களின் நீண்ட 20 ஆண்டுகால கோரிக்கையை ஒரே ஆண்டில் நிறைவேற்றிய அதிமுக கவுன்சிலர் சரவணகுமாருக்கு எம்.ஜி.ஆர் நகர் மக்கள் தங்களின் நன்றிகளை தெரிவித்தனர்,

    Next Story
    ×