search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளி நாற்காலியில் எடுத்து செல்லப்பட்ட மனு பெட்டி
    X

    மாற்றுத்திறனாளி நாற்காலியில் எடுத்து செல்லப்பட்ட மனு பெட்டி

    • பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    • மனு பெட்டியை கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கக் கூடிய ஊழியர்கள் அலுவலகத்திற்குள் எடுத்துச் செல்ல முடிவு.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த காரணத்தினால் வாரந் தோறும் திங்கள் கிழமை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்தார்.

    அதே நேரத்தில் கோரிக்கை தொடர்பாக பொது மக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க அலுவலக வளாகத்தில் நுழைவு வாயில் பகுதியில் மனு பெட்டி வைக்கப்பட்டு அதில் மனுக்களை போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வரக்கூடும் என்பதால் வாசலில் இருந்த மனு பெட்டியை கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கக் கூடிய ஊழியர்கள் அலுவலகத்திற்குள் எடுத்துச் செல்ல முடிவு செய்தனர்.

    இதற்காக மாற்றுத்திறனாளிகளை அமர வைத்து அழைத்துச் செல்லக்கூடிய சக்கர நாற்காலியில் மனு பெட்டியினை தூக்கி வைத்து நகரக்கூடிய நாற்காலியை தள்ளி சென்றனர். இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சிறிது நேரத்திலேயே சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த சம்பவம் கர காட்டக்காரன் படத்தில் நடிகர் ராமராஜன் உள்பட அனைவரும் சேர்ந்து காரை தள்ளிக் கொண்டு செல்லும் காட்சியை நினைவு படுத்துவதாக நெட்டிசன்கள் பதிவிட்டனர்.

    Next Story
    ×