என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
நத்தம் அருகே மட்டை மில்லில் பயங்கர தீவிபத்து
- நேற்று இரவு திடீரென தீப்பற்றி வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
- சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் எந்திரங்கள் உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நத்தம்:
நத்தம் அருகே முளையூர்-நரசிம்மபுரத்தில் தனியாருக்கு சொந்தமான மட்டை மில் உள்ளது. இங்கு நேற்று இரவு திடீரென தீப்பற்றி வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நிலைய அலுவலர் (பொறுப்பு) அம்சராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் எந்திரங்கள் உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிபத்திற்கான காரணம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






