என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீக்குளிக்க முயன்ற வாலிபர் கைது
- நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம்
- நித்யாவை அவரது பெற்றோர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அழைத்துச் சென்றனர்
சேலம்:
சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே மின்னம்பள்ளி அடுத்த ராஜமாணிக்கம் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ராகதேவன் (வயது 21). இவர் கடந்த 21 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .நித்யாவை அவரது பெற்றோர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அழைத்துச் சென்றதால், தனது காதல் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி கடந்த 26-ந் தேதி கலெக்டர் அலுவலகம் எதிரில் திடீரென தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி, ராகதேவனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






