என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
- சிங்களாந்தபுரத்தை சேர்ந்த பெருமாள் மகன் ராமச்சந்திரன் (வயது 35) என்பவர் கடத்தி சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தார்.
- சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந்தேதி நாமக்கல் மாவட்டம் சிங்களாந்தபுரத்தை சேர்ந்த பெருமாள் மகன் ராமச்சந்திரன் (வயது 35) என்பவர் கடத்தி சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்த புகாரின்பேரில் ஆத்தூர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ராமச்சந்திரனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, குற்றவாளி ராமச்சந்திரனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Next Story






