search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே வைக்கோல் போர் தீயில் எரிந்து  நாசம்
    X

    வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசமானதை படத்தில் காணலாம்.

    சின்னசேலம் அருகே வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசம்

    • சின்னசேலம் அருகே வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசமாயின.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் லட்சுமணபுரம் செல்லும் சாலையில் மாமந்தூர் கிராமத்தில் வசிக்கும் அய்யாதுரை. இவர் விவசாயம் செய்து வருகின்ற நிலையில் மாடுகளை பராமரித்து வருகின்றார். மாடுகள் உண்பதற்கு அய்யாதுரை வீட்டில் அருகே வைக்கோல் போர் அமைத்துள்ளார். இன்று காலை வைக்கோல் போர் திடீரென்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அய்யாதுரை உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    பின்னர் தீயணைப்பு சிறப்பு நிலை அலுவலர் ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் உள்ள குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதில் வைக்கோல் போர் முழுவதும் தீயில் எறிந்து நாசமாயின. வைக்கோல் போரை திட்டமிட்டு யாராவது தீ வைத்தாரா? அல்லது அவ்வழியே சென்றவர்கள் பீடி பற்ற வைத்து விட்டு தெரியாமல் தீக்குச்சை போட்டு விட்டார்களா? என்பது தெரியவில்லை. இந்த வைக்கோல் 250 கட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×