search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் பகுதியில் சாலையில் சுற்றித் திரிபவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் சமூக ஆர்வலர்
    X

    ஆதரவற்றோருக்கு புதிய உடை அணிவிக்கும் நிஷார் சேட்.

    ஒட்டன்சத்திரம் பகுதியில் சாலையில் சுற்றித் திரிபவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் சமூக ஆர்வலர்

    • குடும்பத்தினர் கை விட்ட நிலையில் நீண்ட தலைமுடி, தாடியுடன் அழுக்கான உடையில் சுற்றித் திரிந்த அவரை சமூக ஆர்வலர் குளிக்க வைத்து புதிய உடைகள் அணிவி த்தார்.
    • ஆதரவின்றி சுற்றித் திரிபவர்களுக்கு உணவு மற்றும் புதிய உடைகளை கொடுத்து வருகிறேன். என் வாழ்நாள் முழுவதும் இந்த பணியில் ஈடுபடுவேன் என்றார்.

    ஒட்டன்சத்திரம்:

    மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் நிஷார்சேட் (வயது 55). இவர் திண்டுக்கல் மாவட்டம் இடை யகோட்டை, கள்ளிம ந்தயம், ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வருகிறார். அப்பகுதியில் சுற்றித் திரியும் ஆதரவற்ற வர்களை மீட்டு அவர்களை சுத்தம் செய்து புதிய ஆடைகள் அணிவித்து உணவு வாங்கி கொடுக்கிறார்.

    இடையகோட்டை அருகே வெரியப்பூர் பகுதியில் சுற்றித் திரிந்த 40 வயது மதிக்கத்தக்கவரை அவர் மீட்டார். குடும்பத்தினர் கை விட்ட நிலையில் நீண்ட தலைமுடி, தாடியுடன் அழுக்கான உடையில் சுற்றித் திரிந்த அவரை நிஷார் சேட் குளிக்க வைத்து புதிய உடைகள் அணிவி த்தார்.

    இது குறித்து அவர் கூறுகையில், தமிழக த்தில் உள்ள அனைத்து மாவ ட்டங்கள் மற்றும் கேரள, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று மன நலம் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி சுற்றித் திரிபவர்களுக்கு உணவு மற்றும் புதிய உடைகளை கொடுத்து வருகிறேன். என் வாழ்நாள் முழுவதும் இந்த பணியில் ஈடுபடுவேன் என்றார்.

    Next Story
    ×