என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊருக்குள் உலா வந்த ஒற்றைக்காட்டு யானை
    X

    ஊருக்குள் உலா வந்த ஒற்றைக்காட்டு யானை

    • ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.
    • ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றைக்காட்டு யானையை வனத்துறை யினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப் போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும், ஊருக்குள் உலா வந்து மக்களை அச்சுறுத்தி வருவதும் வாடிக்கையாக வருகின்றன.

    இந்நிலையில் நேற்று இரவு பவானிசாகர் வனப் பகுதியை விட்டு வெளி யேறிய ஒற்றைக்காட்டு யானை பவானிசாகர் அணை பூங்கா அருகே உள்ள அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் உலா வந்தது.

    இதைக்கண்டு அச்சம் அடைந்த பொதுமக்கள் இது குறித்து பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    கடந்த சில நாட்களாகவே பவானிசாகர் வனப்பகு தியை விட்டு வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும், இரவு நேரங்களில் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றைக்காட்டு யானையை வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×