search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடுகளை தாக்கிய ஒற்றை யானை
    X

    மாடுகளை தாக்கிய ஒற்றை யானை

    • பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் ஒற்றையானையை விரட்டினர்.
    • ஆக்ரோஷமாக ஓடிய காளை ஒன்று, வேட்டை தடுப்பு காவலர் சுனில் (25) என்பவரை முட்டி தள்ளியது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி வனப்பகுதி, சாவரப்பத்தம் பகுதியில், 10-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித் திரிந்தன. அதனை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் கண்காணித்து, பட்டாசு வெடித்து வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர்.

    அப்போது, காட்டு யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை, அருகே உள்ள கிராமத்திற்குள் புகுந்து. அங்கிருந்த பட்டிக்குள் புகுந்து மாடுகளை ஆக்ரோஷமாக தாக்கியது. இதில் 3 மாடுகளுக்கு கால் முறிந்து பலத்த காயமடைந்தன.

    இது குறித்த தகவலின் பேரில், வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அப்பகுதிக்கு சென்று பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் ஒற்றையானையை விரட்டினர்.

    அப்போது, பட்டிக்குள் இருந்த காளைகள், பட்டாசு சத்தம் கேட்டு மிரண்டு ஓட்டம் பிடித்தன. இதில், ஆக்ரோஷமாக ஓடிய காளை ஒன்று, வேட்டை தடுப்பு காவலர் சுனில் (25) என்பவரை முட்டி தள்ளியது.

    இதில், அவருக்கு வலது மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட வனத்துறையினர், தளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். இது குறித்து அறிந்த ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் மற்றும் தளி இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    Next Story
    ×