மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை

பிடித்து வந்த மீன்களுடன் வலையில் ஆமை ஒன்று சிக்கி இருப்பதை கண்டார்.தனது படகுமூலம் எடுத்துச் சென்று அரிய வகை ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்டு வந்தார்.
சிக்கிய அரிய வகை கடல் ஆமை.
சிக்கிய அரிய வகை கடல் ஆமை.
Published on

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள அண்ணா நகர் புது தெரு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன பிள்ளை மகன் ராஜா.

இவர் புதன்கிழமை நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பினார். அப்போது தான் பிடித்து வந்த மீன்களுடன் வலையில் ஆமை ஒன்று சிக்கி இருப்பதை கண்டார்.

சக மீனவர்களுடன் ஆமை உயிருடன் இருப்பதை உறுதி செய்தார்.

உடனடியாக தனது படகுமூலம் எடுத்துச் சென்று அரிய வகை ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்டு வந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வனத்து றையினர் மீனவர் ராஜாவை பாரா ட்டினர்.

கடல்வாழ் அரிய வகை உயிரினங்களான கடல் குதிரை, கடல் அட்டை, கடல் ஆமை ஆகியவற்றை பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com