என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தனியார் வீட்டில் இயங்கும் அங்கன்வாடி மையம்
- சுமார் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
- எதிர்கால நலனை கருதி தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர்.
கிருஷ்ணாபுரம்,
தருமபுரி மாவட்டம்,காரிமங்கலம் வட்டம்,மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், கம்பைநல்லூர் அருகே உள்ள இருமத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது கொன்றம்பட்டி கிராமம்.
இந்த கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட த்தின் சார்பில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.இந்த அங்கன்வாடி மையத்திற்கு கொன்றம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் நீண்ட நாட்களுக்கு முன்பு கட்டப்பட்டு உள்ளது.தற்போது இந்த கட்டிடத்தின் மேற்கூரைகள் உடைந்தும் கட்டிடங்கள் சேதம் அடைந்து விட்டதால் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் புதிய கட்டிடம் கட்ட வேண்டி நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் பழுதடைந்த இந்த கட்டிடத்திற்கு பதிலாக தனியார் கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட நிர்வாகம் அறிவுறுத்தியதின் பேரில் தற்போது கொன்றம்பட்டி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான வீட்டில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த அங்கன்வாடி மையத்தில் கழிப்பறை வசதிகள்,பாடம் நடத்த போதுமான வசதிகள் உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி அங்கன்வாடி செயல்படுவதால் குழந்தைகளுடைய கல்வித் திறன் மற்றும் எதிர்காலம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இதனால் ஒரு சில பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் எதிர்கால நலனை கருதி தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர்.
எனவே இந்த நிலையை போக்க கொன்றம்பட்டி கிராமத்தில் பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மாவட்ட நிர்வாகம் உடனடியாக அங்கன்வாடி மையம் மையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்க்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்