search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே லாரியில் டீசல் திருடியவர் கைது
    X

    திண்டிவனம் அருகே லாரியில் டீசல் திருடியவர் கைது

    • 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று போலீசார் பிடித்தனர்
    • பல ஆண்டுகளாக இந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் லாரிகளில் இருந்து டீசல்களை திருடியது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் லேபையில் மர்ம நபர் ஒருவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் இருந்து டீசல் திருடுவதாக ஒலக்கூர் சப் -இன்ஸ்பெக்டர் அனந்தராசனுக்கு தகவல் வந்தது .இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது ஒருவர் பெட்ரோலை திருடிவிட்டு போலீசாரை கண்டவுடன் லாரியில் வேகமாக சென்று விட்டார். போலீசார் அவரை சினிமா பாணியில் சேசிங் செய்து சுமார் 5 கிலோ மீட்டருக்கு மேலாக சென்று அவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த குப்பன் (56) என்பது தெரிய வந்தது. இவரை கைது செய்து டீசல் மற்றும் கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் இவர் பல ஆண்டுகளாக இந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் லாரிகளில் இருந்து டீசல்களை திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×