என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது விற்றவர் கைது
    X

    குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது விற்றவர் கைது

    • குமாரபாளையம் நகரில் பகுதியில் பல இடங்களில் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கத்தேரி பிரிவு பசுமை தாபா அருகில் ஒருவர் மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகரில் பகுதியில் பல இடங்களில் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தியா, தங்கவடிவேல் தலைமையில் ஆகியோர் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது கத்தேரி பிரிவு பசுமை தாபா அருகில் ஒருவர் மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்தார். நேரில் சென்ற போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர்.

    விசாரனையில் அவர் வட்டமலை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×